முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 பேரின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:-
சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், வால்டாக்ஸ் ரோடு, பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் மனைவி அருணா மற்றும் அவருடைய மகன் குழந்தை திவான் ஆகியோர் சிறிய மின்விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வள்ளிவாகை கிராமத்தைச் சேர்ந்த. கண்ணன் என்பவரின் மனைவி வள்ளியம்மாள் மோட்டாருக்கு செல்லும் மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சேலம்-தஞ்சாவூர்...

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், வடப்பட்டினம் பழைய நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், ஏற்காடு டவுன் கிராமம், கிரேஞ் எஸ்டேட்டைச் சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் கலைவாணன் மின்கம்பத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கீழத்திருப்பூந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த. நடேசன் என்பவரின் மகன். பழனி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம்-சிவகங்கை

காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல் கிராமத்தைச் சேர்ந்த அனந்தநாத நைனார் என்பவரின் மகன் சம்பத்குமார் இளநிலை பொறியாளர் என்பவர் துணை மின் நிலையத்தில் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்பாச்சேத்தி உள்வட்டம், டி.பறையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கணேசன்மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவாரூர் மாவட்டம், மற்றும் வட்டம், பெருந்தரக்குடி கிராமம், தென்புலியூர் உட்கிராமத்தைச் சேர்ந்த மணி (லேட்) என்பவரின் மனைவி சரசு என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், சித்தன்னவாசல் சரகம், லெக்கனாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அடைக்ககோனார் மகன் மருதன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்-கடலூர்...

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், நடுக்காவேரி சரகம், கோனேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த. பால்ராஜின் மனைவி கோகிலா என்பவர் மோட்டாருக்கு செல்லும் மின்கம்பியை தவறுதலாக தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், மஞ்சகுப்பம் குறுவட்டத்தை சேர்ந்த பூபாலனின் மகள் மகாலட்சுமி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தலா ரூ.3 லட்சம்...

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 12 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து