முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தேசிய கொடிக்கு மதிப்பளித்த ஷாகித் அப்ரிடி

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி, இந்திய தேசிய கொடிக்கு மதிப்பளித்த சம்பவத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அப்ரிடி அணி வெற்றி

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற ஐஸ் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தலைமையிலான அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷாகித் அப்ரிடி தலைமையிலான அணியும் மோதியது. கடும் குளிரில் நடந்த இந்த ஐஸ் கிரிக்கெட் போட்டியில் அப்ரிடி அணி வெற்றி பெற்றது.

புகைப்படம் எடுத்து...

இந்தப் போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி ஷாகித் அப்ரிடியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார். அவரின் அருகில் வந்த ஷாகித், ’கையில் எதை மடக்கி வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். இந்திய தேசிய கொடி என்று அந்தச் சிறுமி சொன்னதும், ’கொடியை விரித்துப் பிடியுங்கள்’ என்று கூறிவிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

குவியும் பாராட்டு...

இதையடுத்து அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் அவரது மரியாதையை கண்டு வியந்தனர். பலர் ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். சிலர் ஆட்டோகிராப் பெற்றனர். ஷாகித் அப்ரிடி, இந்திய தேசிய கொடிக்கு கொடுத்த மரியாதைக்காக சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக் குவிந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து