முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று (12.02.2018) நடைபெற்றது.

நடவடிக்கை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 340 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

தையல் எந்திரம்

இக்கூட்டத்தில் இன்று காலை மனு அளித்த விசாலாட்சி என்ற பயனாளிக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், பரசுராம் என்ற பயனாளிக்கு உடனடியாக விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு தையல் இயந்திரமும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, வருவாய் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை சார்பில் கரூர் மாவட்டத்தில்; திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்திய அங்கன்வாடி மையங்களுக்கு ஐஎஸ்ஓ (ஐளுழு) தரச்சான்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகா~;, சிறுபான்மையினர் நல அலுவலர் சாந்தி, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து