முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்லாவரம் பகுதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த 2 சிறுவர்கள் உட்பட நான்கு நபர்கள் கைது

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      சென்னை
சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
 இதன் தொடர்ச்சியாக, ளு-5 பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலை, ஒலிம்பியா பில்டிங் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்ந நான்கு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
சிறையில் அடைப்பு
 சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது 1 1/2 அடி நீளமுள்ள கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததன் பேரில் நான்கு நபர்களையும் பிடித்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் 1.ஹரீஷ், 2.ஆகாஷ், மற்றும் 2 பேர் இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் சேர்ந்து பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 1 1/2 நீளமுள்ள கத்தி, 14 செல்போன்கள் மற்றும்1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஹரிஷ், ஆகாஷ் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 2 சிறுவர்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து