முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (12.02.2018) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கோரிக்கை மனுக்கள்

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டியும், வங்கி கடன் உதவி வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 309 மனுக்கள் வரப்பெற்றன.

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலால் துறை உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பில் மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு தலா ரூ.30,000 வீதம் ரூ.2,70,000 மதிப்பீட்டில் 9 கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதியுதவியினையும், திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையினையும், வளர்ச்சித் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிப்புரிந்து வந்த ப.முருகேசன் என்பவர் பணியிடையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசுத்தாரரும் மகனுமாகிய மு.செந்தில் என்பவருக்கு கருணை அடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான உத்தரவு ஆணையினையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

தேசிய அடையாள அட்டை

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இடைநில்லா கல்வி பயில வைப்புத்தொகையாக ரூ.1500 வீதம் 7 மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு ரூ.10,500 மதிப்பிலான வைப்புத்தொகை பத்திரங்களையும், 39 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும்; என இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்; 57 பயனாளிகளுக்கு ரூ.2,92,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) எம்.துரை, உதவி ஆணையர் (கலால்) எம்.இலாஹிஜான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) ஷ.ஹசீனாபேகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து