எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை, ஜெயலலிதா பேரவையின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பாக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது, வருவாய்த்துறை அமைச்சரும் ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்; அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் , ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
70 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள்
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவினை "நாட்டு மக்களின் நல்வாழ்வு தின" மாக, ஜெயலலிதா பேரவை சார்பில் ஆண்டு முழுவதும் கடைப்பிடித்து, அனைத்துப் பிரிவினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அன்னதானம், இரத்ததானம், கண் தானம் போன்றவற்றை வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்த தின விழாவினை, உலகமே பாராட்டுகின்ற வகையில், அம்மா பேரவை சார்பில் கொண்டாடுவதோடு, அவரது திருப்பெயரால்70 வகையான சீர்வரிசைகளோடு, 70 திருமணங்களையும் நடத்துவதென தீர்மானிக்கிறது.
மேலும் ஒட்டு மொத்த இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில், 10,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கு கொள்கின்ற "மாபெரும் இளைஞர் பெருவிழா" வினையும்; கிராமப் பாரம்பரிய வீர விளையாட்டான "ரேக்ளா ரேசி" னையும், கிராம இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்னும் பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி உலகமே வியக்கின்ற வகையில், ஆண்டு முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த தின விழாவினைக் கொண்டாடிட அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.
5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை தீவிரமாகக் கடைப்பிடித்து, கிராமம், கிராமமாகச் சென்று, 5 லட்சம் இளைஞர், இளம் பெண்களை அ.தி.மு.க கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்து, ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்கின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே அரசியல் இயக்கம் அ.தி.மு.க. ஒன்றுதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்ற வகையில், "புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை" நடத்திட, ஜெயலலிதா பேரவை இக்கூட்டத்தின் வாயிலாக உறுதியேற்கிறது.
சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஈடில்லா தியாகத்தினையும், அயராத உழைப்பினையும், வற்றாத அன்பினையும், வாழும் வரலாறாக, வருங்கால தலைமுறைக்கு வழங்கிடும் வகையில், அவரது முழு உருவப் படத்தை, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைத்து, வரலாறு படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவைத் தலைவர், ப.தனபால் ஆகியோருக்கு, ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.
அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச்சிலை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வங்கக் கடலோரம், மிகப் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைத்து, வருகின்ற காலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கிச் செல்லும் "புனித வழிபாட்டுத் தலமாக" உருவாக்கித் தந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரோடு இணைந்து ஆதரவு அளித்து துணை நிற்கின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், அம்மா வாழ்ந்து வரலாறு படைத்திட்ட "போயஸ் தோட்ட இல்லத்தை", பொதுமக்கள் அனைவரும் வந்து பார்த்து வணங்கிச் செல்கின்ற வகையில் "நினைவு இல்லமாகவும்", அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவச் சிலையை நிறுவிட மிக விரைவாக நடவடிக்கை எடுத்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.
பல்வேறு சோதனைகளை, சாதனைகளாக்கி, நெருப்பாற்றில் நீந்தி, சரித்திர சாதனை பல படைத்திட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால், அயராத உழைப்பால், உருவாக்கப்பட்ட இச்சீர்மிகு தலைமைக் கழக கட்டிடத்திற்கு "அம்மா அன்பு மாளிகை" என்ற திருப்பெயரைச் சூட்ட வேண்டும் என்றும், அவரது முழு திருவுருவச் சிலையினை தமிழக சட்டமன்ற வளாகத்திலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும் திறந்திட வேண்டும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாக வாழ்விற்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது திருவுருவப் படத்தினை திறந்திட வேண்டும் என்றும், இத்திருப்பணிகளை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றிட அனைத்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா பேரவை வேண்டுகிறது. இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.