முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்ட சாலைகளில் விபத்தில்லா பயணத்திற்கு வாகனத்தின் வேகம் நிர்ணயம் கலெக்டர் என்.வெங்கடேஷ் அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 112, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் 1989 விதி 370-ன்படி மாவட்ட / மாநில / தேசிய நெடுஞ்சாலைகளில்   வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமதாரர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள  வேண்டிய வாகனத்தின் வேகத்தை நிர்ணயம் செய்து கலெக்டர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

வாகனத்தின் வேகம் அறிவிப்பு

தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் டிசிடபிள்யு முன் உள்ள சாலைக்கு 40 கி.மீ வேகம் எனவும், தூத்துக்குடி மாநகர எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலைகளில் 40 கி.மீ வேகம் எனவும், பிற சாலைகளில் 35 கி.மீ வேகம் எனவும்இ திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய நகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் வேக வரம்பு 40 கி.மீ  எனவும், எப்சிஐ ரவுண்டானாவிலிருந்து புதுக்கோட்டை வரை உள்ள (என்எச் 138) நெடுஞ்சாலையில் வேக வரம்பு 60 கி.மீ  எனவும் நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.என்எச் 45பி குறுக்குச்சாலை பகுதியிலும் எட்டயபுரம் அருகில் விளாத்திகுளம் பிரிவு சாலை பகுதியிலும், இசிஆர் பிரிவு சாலை பகுதியிலும் வேக வரம்பு 60 கி.மீ  வேகம் எனவும்இ ஆழ்வார்திருநகரியில் செல்லும் எஸ்எச் 40 சாலையில் ஊருக்குள் செல்லும் சாலையில் 30 கி.மீ  கி.மீ வேகம் எனவும் எஸ்எச் 40 குரும்பூர் ஊர் எல்லைக்குள் செல்லும் பகுதிக்கு வேகவரம்பு 30 கி.மீ வேகம் எனவும், அனைத்து பேரூராட்சிகளில் மற்றும் தாலுகா தலைமையிடங்களில் செல்லும் சாலைகளில் 30 கி.மீ  கி.மீ வேகம் எனவும்,  வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர்-பாளையங்கோட்டை சாலையில் குமாரபுரம் முதல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வரை 30 கி.மீ  எனவும்,  தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவிலிருந்து முள்ளக்காடு வரை 40 கி.மீ  எனவும்,   வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மாவட்ட / மாநில / தேசிய  நெடுஞ்சாலைகளில் மேற்கண்ட வேக வரம்பினை பின்பற்றி சாலை விபத்துகளை தவிர்க்குமாறு கலெக்டர் என்.வெங்கடேஷ் கேட்டுக் கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து