முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாத பெண் குழந்தை நரபலி : மனைவியுடன் டாக்ஸி டிரைவர் கைது

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் :  சந்திர கிரகணத்தன்று 3 மாத பெண் குழந்தையைக் கடத்தி, நரபலி கொடுத்த டாக்ஸி டிரைவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஐதராபாத் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து ஐதராபாத் நகர போலீஸ் ஆணையர் மகேஷ் பகவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஐதராபாத் உப்பல் சிலக்நகர் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் ராஜசேகர். இவரது மனைவி லலிதா. லலிதாவிற்கு சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது.

மூட நம்பிக்கை அதிகமுள்ள ராஜசேகர், தனது மனைவியின் உடல் நலம் சரியாக மாந்திரீகர் ஒருவர் சொன்ன வார்த்தைகளை நம்பி  கடந்த 31-ம் தேதி இரவு, சந்திர கிரகணத்தன்று, போயகூடா பகுதியில் பிளாட்பாரம் மீது தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தையை தனது காரில் கடத்தி வந்து மூசி நதிக்கரையில் குழந்தையின் தலையை வெட்டி, உடலை அந்த நதியில் வீசி விட்டு ரத்தம் உறைந்த பின்னர் தலையை மட்டும் ஒரு பையில் போட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

பின்னர் வீட்டில் மனைவியுடன் சேர்ந்து குழந்தையின் தலைக்கு முன்னே நிர்வாண பூஜை நடத்தியுள்ள்னர். அடுத்து, அந்தத் தலையை தனது வீட்டின் மேற்கூரையில், சந்திரனின் வெளிச்சம் விழும்படி வைத்துள்ளார். மறுநாள்  ராஜசேகரின் அத்தை அவரது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மொட்டை மாடியில் ஒரு குழந்தையின் தலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். இது குறித்து தகவலறிந்த உப்பல் போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
 
இது தொடர்பாக கடந்த 15 நாட்களில் 45 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக ராஜசேகர்தான் கொலையாளி எனத் தெரிந்தபின்னர் அவரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். ஆனால், இது வரை பலி கொடுக்கப்பட்ட குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸ் ஆணையர் மகேஷ் பகவத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து