எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகம் இனி புதிய அணை கட்ட முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று வெளியிட்டது.
நடுவர் மன்ற தீர்ப்பு...
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளிக்கும் போது, தமிழகத்தில் இருக்கும் நிலத்தடி நீரை கருத்தில் கொள்ளவில்லை என்றும், கர்நாடகாவை விட தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும், எனவே, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி நீர் வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்துக்கு குறைவு...
மேலும், கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவை, தொழில்நிறுவனங்களுக்கான தேவை என அனைத்தையும் கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் காவிரி நீரை பகிர்ந்து அளித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகக் கூறி 14.75 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்குக் குறைவாக ஒதுக்கியிருக்கும் சுப்ரீம் கோர்ட், அதனை கர்நாடகாவுக்கு அளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
இதுவரை சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டு வந்த கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி தண்ணீரை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அதனை எப்படி பங்கிட வேண்டும் என்றும் ஒரு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது. அதன்படி, கடும் குடிநீர் பஞ்சத்துக்கு உள்ளாகியிருக்கும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி தண்ணீரை வழங்கவும், தொழில் நிறுவனங்களுக்கு 10 டி.எம்.சி தண்ணீரை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் கவலை
ஏற்கனவே தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 192 டி.எம்.சி தண்ணீரில் தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் 177.25 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமை தமிழக விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், பருவ மழை பற்றாக்குறை காலங்களில் இந்த 177.25 டி.எம்.சி நீரும் கிடைக்குமா என்ற கேள்வியும், பற்றாக்குறை காலங்களில் காவிரி நீரை எப்படி பங்கிடுவது, எந்த அளவுக்கு நீர் கிடைக்கும் என்ற கேள்வியும் தமிழக விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.
மேலாண்மை வாரியம் அமைக்க...
காவிரி ஆற்றை தனிப்பட்ட ஒரு மாநிலம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
புதிய அணை கட்ட முடியாது
1892, 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
மேல்முறையீடு கிடையாது...
காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை...
தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காவிரி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தீர்ப்பின் சிறப்பம்சங்கள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:-
1.காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும்.
2. 2007-ல் நடுவர்மன்றம் 192 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.
3. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.
4. தமிழகத்திற்கான ஒதுக்கீடு குறைப்பால் கர்நாடகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக கிடைக்கும்.
5. தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
6. காவிரி நீரை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது.
7. கர்நாடகாவுக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி அளித்த நிலையில் அது 284.75 டிஎம்சியாக உயர்வு.
8. தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சியில் 4.75 டிஎம்சி நீர் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு.
9. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் காவிரியில் 284.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கிடைக்கும்.
10. கேரளா (30 டிஎம்சி) புதுச்சேரி (7 டிஎம்சி) என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை.
11. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு.
12. தீர்ப்பின் மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு கர்நாடகா நீரைத் திறக்க வேண்டும்.
13.பெங்களூரின் குடிநீர் தேவை, தமிழக நிலத்தடி நீர் இருப்பு குறித்து நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
14. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த சில பிழைகள் இந்த தீர்ப்பில் சரிசெய்யப்பட்டு விட்டன.
15. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த ஓரிரு பிழைகள் சரி செய்யப்பட்டதால் அது இறுதித் தீர்ப்பாக இருக்கும்.
16. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
17.நடுவர் மன்ற உத்தரவு இறுதி செய்யப்பட்டு விட்டதால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.
18. சென்னை மற்றும் மைசூரு மாகாணங்கள் இடையே 1892, 1924 ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் செல்லும்.
19. சென்னை, மைசூரு மாகாண ஒப்பந்தங்களின்படி, காவிரியில் தமிழக அனுமதியின்றி அணை கட்ட முடியாது.
20. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.