முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டு நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வசூல் செய்தது ரூ. 1,500 கோடி

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  கடந்த ஆண்டு நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு 5 தேசியக் கட்சிகளும், 16 மாநில கட்சிகளும் இணைந்து ரூ.1,500 கோடி வசூலித்துள்ளன. இதில் பா.ஜ.க மட்டும் ரூ.1,214.46 கோடி வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் 5 தேசியக்கட்சிகளும், 16 மாநில கட்சிகளும் போட்டியிட்டன. இந்த கட்சிகள் தேர்தல் செலவுக்கு வசூலித்த தொகை குறித்து தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் கணக்கு தாக்கல் செய்தன. ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தேசியக் கட்சிகளில் மத்தியில் ஆளும் அரசான பா.ஜ.க அதிகபட்சமாக ரூ.1,214.46 கோடி வசூலித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து