முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாச்சியார் படத்தில் கோவில் குறித்த சர்ச்சை வசனம்: இந்து அமைப்புகள் காவல் ஆணையரிடம் புகார்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      சினிமா
Image Unavailable

சென்னை, பாலா இயக்கத்தில், ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இருப்பதாக கூறி இந்து அமைப்புகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

ஜோதிகா நடித்து பாலா இயக்கியுள்ள படம் நாச்சியார். இதில் ஜோதிகா இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் குற்றவாளிகளைத் தாக்கி விட்டு ஜோதிகா பேசும் அவதூறு வார்த்தைகள் வாட்ஸ் அப், முகநூல், இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேறொரு வசனம் மூலமும் இந்தப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. நாச்சியார் படத்தில் ஒரு காட்சியில் ஜோதிகா கோயிலா இருந்தாலும் குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்று பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பாரத் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

அதில் இயக்குனர் பாலா மற்றும் ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜோதிகா, இயக்குனர் பாலா வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாகவும் செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து