எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற சிறப்பு அம்மா திட்ட முகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பயனாளிகள் 126பேருக்கு ரூ.5.6லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு பதவியேற்று ஓராண்டு ஆனதை கொண்டாடிடும் வகையில் முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்புகள் வழங்கினார்.
தமிமிழக அரசின் சார்பில் கிராமப்புறங்களுக்கு நேரிடையாகச் சென்று மக்களின் குறைகளை தீர்த்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் மாநிலம் முழுவதிலும் அம்மா திட்ட முகாம்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது.இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா முன்னிலை வகித்தார்.திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம் வரவேற்று பேசினார்.ஏராளமான கிராம மக்கள் பங்கேற்ற இந்தமுகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை,மூன்று சக்கரவாகனம், வீட்டுமனை பட்டா,பட்டா உட்பிரிவு,பட்டா மாற்று,பட்டாநகல்,வேளாண்மை உதவித்தொகை என பயனாளிகள் 126 பேருக்கு ரூ.5.6லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கொடுத்த மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக் கொண்டு அந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு ஓராண்டினை நிறைவு செய்ததை கொண்டாடிடும் வகையில் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:அம்மா நம்மை விட்டுச் சென்ற பின்னர் மெஜாரிட்டியான இந்த அரசை காப்பாற்றிட முடியுமா என்று கவலையுடன் இருந்த வேளையில் அம்மாவின் அருளாசியுடன் அம்மாவின் மாணவரான எடப்பாடியார் பொறுப்பேற்று ஓராண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.எதிர்கட்சியினரின் விமர்சனங்களை தாண்டி நிறைகுடம் தழும்பாது என்பது போல் நிதானமாக ஆர்ப்பாட்டமின்றி அம்மாவின் வழியில் வெற்றிகரமாக இந்த ஓராண்டில் அமைந்துள்ள அடித்தளம் இன்றும் 100ஆண்டுகளுக்கு அம்மாவின் அரசு அன்னைத் தமிழகத்தில் சேவை செய்திடும்.ஓராண்டு நிறைவடைந்துள்ள இந்த இனிய நாளை கொண்டாடிடும் வகையில் இங்கே இனிப்பு லட்டு வழங்கப்பட்டுள்ளது.அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்றிடும் அரசாக இந்த அரசு திகழ்கிறது.மக்களுக்காக திட்டங்களை இந்திய திருநாட்டில் உருவாக்கி தந்த ஒரே முதலமைச்சராக அம்மா திகழ்ந்தார்கள்.அதில் முதன்மையானது அம்மா திட்டம் தான்.
நிர்வாக புரட்சியை இந்திய திருநாட்டிலே நிகழ்த்திக்காட்டிய ஒரே தலைவி அம்மா தான். கோடான கோடி திட்டங்களை அம்மா தமிழகத்திற்கு உருவாக்கி தந்தார்கள்.தாய்மார்களின் சிரமத்தை குறைத்திட விலையில்லா பொருட்கள்,தாலிக்கு 8கிராம் தங்கத்துடன் நிதியுதவி என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.எந்த மாநிலத்திலும்இது போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் தமிழகத்தை தவிர வேறெங்கும் கிடையாது.உறவினர்கள் அனைவரும் கைவிட்டாலும் அம்மாவின் அரசு மக்களை என்றுமே கைவிடாது.தமிழகத்தில் 30லட்சம் பேருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆயள் முழுதும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்புமிக்க அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடியார் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. அன்னை தமிழகத்தில் ஏழரை கோடி மக்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அம்மாவின் அரசு வெளிப்படை தன்மை கொண்டதாக செயல்பட்டு வருகிறது.தமிழகத்தை தடையில்லா மின்சாரம் கொண்ட மின்மிகை மாநிலமாக உருவாக்கி சாதனை படைத்தவர் அம்மா.
அனைத்து தரப்பினரது பேராதரவுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ள அம்மாவின் அரசுஇன்னும் நூறு ஆண்டுகள் உங்களுக்கு சேவை செய்திட வேண்டும்.மக்கள் பணியாற்றி ட வேண்டும்.தற்போது பலர் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு முன்கூட்டியே பதிலளித்திடும் வகையில் தொலைநோக்கு திட்டம் 2023ன் மூலமாக தனிநபர் வருமானத்தை 6மடங்கு உயர்த்தி அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கிட அமைதி,வளம்,வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை அன்னை தமிழகத்திற்கு கொடுத்தவர் அம்மா.பிப்ரவரி 24ம் தேதி 1லட்சம் உழைக்கும் மகளிருடைய கையிலே ஸ்கூட்டியை வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.25ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.அம்மா வழங்கிடும் அந்த ஸ்கூட்டரை தாய்மார்கள் ஓட்டிச்செல்ல இருக்கிறார்கள்.இன்னும் 100ஆண்டுகள் அன்னை தமிழகத்திற்கு சேவையாற்றிட அனைவரும் ஆதரவு தெரிவித்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட சார்புஅணி இணைச் செயலாளர் ஆண்டிசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்.சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லட்சுமி,மற்றும் பல்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.