முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம்:

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

  திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற சிறப்பு அம்மா திட்ட முகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பயனாளிகள் 126பேருக்கு ரூ.5.6லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு பதவியேற்று ஓராண்டு ஆனதை கொண்டாடிடும் வகையில் முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்புகள் வழங்கினார்.
தமிமிழக அரசின் சார்பில் கிராமப்புறங்களுக்கு நேரிடையாகச் சென்று மக்களின் குறைகளை தீர்த்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் மாநிலம் முழுவதிலும் அம்மா திட்ட முகாம்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது.இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா முன்னிலை  வகித்தார்.திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம் வரவேற்று பேசினார்.ஏராளமான கிராம மக்கள் பங்கேற்ற இந்தமுகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை,மூன்று சக்கரவாகனம், வீட்டுமனை  பட்டா,பட்டா உட்பிரிவு,பட்டா மாற்று,பட்டாநகல்,வேளாண்மை உதவித்தொகை என பயனாளிகள் 126 பேருக்கு ரூ.5.6லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கொடுத்த மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக் கொண்டு அந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு ஓராண்டினை நிறைவு செய்ததை கொண்டாடிடும் வகையில் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:அம்மா நம்மை விட்டுச் சென்ற பின்னர் மெஜாரிட்டியான இந்த அரசை காப்பாற்றிட முடியுமா என்று கவலையுடன் இருந்த வேளையில்  அம்மாவின் அருளாசியுடன் அம்மாவின் மாணவரான எடப்பாடியார் பொறுப்பேற்று ஓராண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.எதிர்கட்சியினரின் விமர்சனங்களை தாண்டி நிறைகுடம் தழும்பாது என்பது போல் நிதானமாக ஆர்ப்பாட்டமின்றி அம்மாவின் வழியில் வெற்றிகரமாக இந்த ஓராண்டில் அமைந்துள்ள அடித்தளம் இன்றும் 100ஆண்டுகளுக்கு அம்மாவின்  அரசு அன்னைத் தமிழகத்தில் சேவை செய்திடும்.ஓராண்டு நிறைவடைந்துள்ள இந்த இனிய நாளை கொண்டாடிடும் வகையில்  இங்கே இனிப்பு லட்டு வழங்கப்பட்டுள்ளது.அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்றிடும் அரசாக இந்த அரசு திகழ்கிறது.மக்களுக்காக திட்டங்களை  இந்திய திருநாட்டில் உருவாக்கி தந்த ஒரே  முதலமைச்சராக அம்மா திகழ்ந்தார்கள்.அதில் முதன்மையானது அம்மா திட்டம் தான்.
 நிர்வாக புரட்சியை இந்திய திருநாட்டிலே  நிகழ்த்திக்காட்டிய ஒரே தலைவி அம்மா  தான். கோடான கோடி திட்டங்களை அம்மா தமிழகத்திற்கு உருவாக்கி தந்தார்கள்.தாய்மார்களின் சிரமத்தை குறைத்திட விலையில்லா பொருட்கள்,தாலிக்கு 8கிராம் தங்கத்துடன் நிதியுதவி என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.எந்த  மாநிலத்திலும்இது போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் தமிழகத்தை தவிர வேறெங்கும் கிடையாது.உறவினர்கள் அனைவரும் கைவிட்டாலும் அம்மாவின் அரசு மக்களை என்றுமே கைவிடாது.தமிழகத்தில் 30லட்சம் பேருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆயள் முழுதும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்புமிக்க அம்மாவின் அரசை   முதல்வர் எடப்பாடியார் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. அன்னை தமிழகத்தில் ஏழரை கோடி மக்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அம்மாவின் அரசு வெளிப்படை தன்மை கொண்டதாக செயல்பட்டு வருகிறது.தமிழகத்தை தடையில்லா மின்சாரம் கொண்ட  மின்மிகை மாநிலமாக உருவாக்கி சாதனை படைத்தவர் அம்மா.
அனைத்து தரப்பினரது பேராதரவுடன்  ஓராண்டை நிறைவு செய்துள்ள அம்மாவின் அரசுஇன்னும் நூறு ஆண்டுகள் உங்களுக்கு சேவை செய்திட வேண்டும்.மக்கள் பணியாற்றி ட வேண்டும்.தற்போது பலர் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு முன்கூட்டியே பதிலளித்திடும் வகையில் தொலைநோக்கு திட்டம் 2023ன்  மூலமாக தனிநபர் வருமானத்தை 6மடங்கு உயர்த்தி   அனைவருக்கும்  வேலை வாய்ப்பு வழங்கிட அமைதி,வளம்,வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை  அன்னை தமிழகத்திற்கு கொடுத்தவர் அம்மா.பிப்ரவரி 24ம் தேதி   1லட்சம் உழைக்கும் மகளிருடைய கையிலே ஸ்கூட்டியை வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.25ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.அம்மா வழங்கிடும் அந்த ஸ்கூட்டரை தாய்மார்கள் ஓட்டிச்செல்ல  இருக்கிறார்கள்.இன்னும் 100ஆண்டுகள் அன்னை தமிழகத்திற்கு சேவையாற்றிட அனைவரும் ஆதரவு தெரிவித்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட சார்புஅணி இணைச் செயலாளர் ஆண்டிசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்.சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லட்சுமி,மற்றும் பல்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து