முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      கடலூர்

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை, கூத்தப்பாக்கம் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையோரம் பலப்படுத்தும் பணியினையும், அங்குள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலினையும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுப்ணித்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கலெக்டர் ஆய்வு

அதனைத் தொடர்ந்து, திருவந்திபுரம் அணைக்கட்டு பகுதியினை பார்வையிட்ட கலெக்டர்  கரைகளை பலப்படுத்தியதோடு, வீடுகளின் அருகில் அணைக்கட்டு இருப்பதால் கரையின் இருபுறமும் கைப்பிடிச்சுவரினை அமைக்கவேண்டும் எனவும், மேலும் இப்பகுதியில் பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.அதன்பின்னர் பெரியகாட்டுப்பாளையம் ஓடையினை கலெக்டர் பார்வையிட்டு ஓடையின் இருபுறமும் கரை பலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுப்ணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினாரபின்னர் கீழிருப்பு பகுதியில் நடுக்குப்பம் இணைப்பு சாலையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் கீழிருப்பு மேலிருப்பு பாலப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கீழிருப்பு ஓடையில் உள்ள பாலப்பகுதியினை கலெக்டர் பார்வையிட்டு அப்பகுதியில் தூர்வாரும் மற்றும் கரையினை பலப்படுத்தும் ஆகிய பணியினை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுப்ணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து மேலிருப்பு ஓடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரை பலப்படுத்தும் பணி மற்றும் தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ள இடங்களை பார்வையிட்டார். பின்னர் விசூர் ஓடை கரை பலப்படுத்தும் பணி மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என விரைந்து முடிக்கவேண்டும் என பொதுப்ணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.இந்த ஆய்வின்போது கடலூர் பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர்  கோவிந்தராஜ், உதவி பொறியாளர்  மோகன்ராம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  வை. ரவிச்சந்திரன், விருத்தாச்சலம் வெள்ளாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் எம்.சண்முகம், உதவி பொறியாளர்கள் ஏ. கபிலன், ஏ. வெங்கடேசன், பண்ருட்டி வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து