முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: திரிபுராவில் இன்று வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

அகர்தலா, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் வேட்பாளர் ராமேந்திர நாராயன் கடந்த 5 நாட்களுக்கு முன் திடீரென இறந்து விட்டதால், அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் மார்ச் 12-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் திரிபுராவில் பழங்குடியினருக்காக மட்டும் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திரிபுராவில் உள்ள மொத்தமுள்ள 60 தொகுதிகளில் மொத்தம் 307 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான இடது முன்னணி, ஆர்.எஸ்.பி, பார்வார்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், பா.ஜ.க, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி(ஐ.பி.எப்.டி) கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. பா.ஜ.க 51 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி இந்த முறை 59 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கோமதி மாவட்டத்தில் உள்ள காக்ரபான் தொகுதியில் மட்டும் வேட்பாளரை நிறுத்தவில்லை. திரிபுராவில் ஏறக்குறைய 25 லட்சத்துக்கு 73 ஆயிரத்து 413 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 47 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 3 ஆயிரத்து 214 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 47 மையங்கள் பெண்கள் மட்டுமே மேலாண்மை செய்யும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த கால்நூற்றாண்டுகளாக அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக மாணிக் சர்க்கார் 1998ம் ஆண்டில் இருந்து இருந்து வருகிறார். இந்த முறையும் அவர் வென்று 6-வது முறையாக முதல்வராக பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களில் தடம் பதிக்கும் முயற்சியுடன் பா.ஜ.க தீவிரமாக பிரசாரம் செய்தது. பிரதமர் மோடி திரிபுராவில் மட்டும் 4 கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். கட்சியின் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, ஸ்மிருதி இராணி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தற்கு பலன் அளிக்குமா என்பது தெரிந்துவிடும்.

5-வது முறையாக முதல்வராக இருந்து வரும் மாணிக் சர்க்கார் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளார். மேலும், இடது சாரித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கூட்டங்களில் பிரச்சாரம் செய்த நிலையில், இறுதியாக அகர்த்தலா அருகே கைலாஷ்சரார் நகரில் பிரசாரம் செய்தார்.

திரிபுராவில் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து