முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மதவாத அரசியல் செய்ய நினைத்தால் ஒடுக்க தயங்கமாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் மதவாத அரசியல் செய்ய நினைத்தால் ஒடுக்க தயங்கமாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கருத்து கூற இயலாது

தமிழக மீன்வளத்துறை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியார்களிடம் கூறியதாவது:

துணை முதலமைச்சருக்கும் பிரதமருக்கு இடையே நடந்த பேச்சு பற்றி என்னால் கருத்து கூற இயலாது.  சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அதிமுக இணையவேண்டும் என பிரதமர் மட்டுமல்ல, யார் கூறியிருந்தாலும் சரிதான். தமிழக வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுகிறோம்,

தயங்கமாட்டோம்...

மாநில சுயாட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் மதவாத அரசியல் செய்ய நினைத்தால் ஒடுக்க தயங்கமாட்டோம். இலங்கையில் உள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அது அழிக்கப்படும். காவிரி நீருக்கு கர்நாடகம் ஓனர் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து