எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹேமில்டன் : ஹேமில்டனில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தினாலும் நிகர ரன்விகிதத்தில் நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.
ஆனால் 4 போட்டிகள் தொடர் தோல்வியை இங்கிலாந்து நிறுத்தியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுக்க பரபரப்பான விரட்டலில் நியூஸிலாந்து 192/4 என்று தோல்வி தழுவியது.
ஆனால் 19-வது ஓவரில் நியூஸிலாந்து அணி நிகர ரன் விகித அடிப்படையில் இங்கிலாந்தைக் கடந்ததால் அப்போதே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது, இருந்தாலும் கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவை என்ற நிலையில் நியூஸிலாந்து 9 ரன்களையே எடுக்க முடிந்தது.
இலக்கை விரட்டும் போது கொலின் மன்ரோ நேற்றும் அதிரடி மூடில் இருந்தார். 18 பந்துகளில் 50 எடுத்த அவர் 21 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அடில் ரஷீத்திடம் ஆட்டமிழந்தாலும் நியூசிலாந்து ரன் விகிதம் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது.
மார்டின் கப்தில் 47 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார், மன்ரோ தன் 57 ரன்களில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் விளாசினார்.
இங்கிலாந்து முதலில் ஜேசன் ராயின் (21) அதிரடி மூலம் நல்ல தொடக்கத்தைக் கண்டது, ஆனால் டிம் சவுதி 2 விக்கெட்டுகளைச் சாய்க்க (2/22) டேவிட் மலான், மோர்கன் அணியை நிலை நிறுத்தும் வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. டேவிட் மலான் 32 பந்துகளில் அரைசதம் கண்டார். அதாவது ஃப்ரீ ஹிட் ஒன்றை மைதானத்துக்கு வெளியே அடித்தார். ஆனாள் அதன் பிறகு டிகிராண்ட் ஹோமிடம் (1/32) ஆட்டமிழந்து வெளியேறினார். 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 53 ரன்கள் விளாசி மலான் ஆட்டமிழந்தார்.
மோர்கன் பிறகு சாத்துமுறை செய்தார், அவர் தன் இஷ்டத்துக்கு பவுண்டரிகளை அடித்துக் கொண்டிருந்தார். 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் மோர்கன். இன்னிங்ஸின் கடைசி பந்தை கிறிஸ் ஜோர்டான் சிக்சருக்குத் துக்க இங்கிலாந்து அணி 194 ரன்களுக்கு வந்தது.
194 ரன்கள் இலக்கு என்பது பேப்பரை கசக்கி எறிந்தாலே மையத்திலிருந்து சிக்ஸ் செல்லும் நியூஸி. மைதானங்களில் ஒன்றுமில்லை என்ற நிலையில் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்து தோல்வியடைந்தாலும் நியூஸிலாந்து அணி நிகர ரன் விகிதத்தில் இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்ற நிலையே இருந்தது.
ஆனால் கொலின் மன்ரோ வேறு ஒரு மூடில் இருந்தார் பவர்பிளேயின் போதே 7 சிக்சர்களை தூக்கித் தூக்கி அடித்தார். அரைசதத்தை 18 பந்துகளில் எட்டினார். களவியூகக் கட்டுப்பாடுகள் முடிந்தவுடன் மோர்கன் ஸ்பின்னர்களிடம் பந்தை அளித்தார். ரஷீத் 3 பந்துகளில் மன்ரோவை வெளியேற்றினார். இவரும் லியாம் டாசனும் இங்கிலாந்தை வெற்றி வழிக்குத் திருப்பினர்.
இரு ஸ்பின்னர்களும் சேர்ந்து 8 ஓவர்களை வீசினர். இதில் டாசன். கேன் வில்லியம்சை பவுல்டு செய்தார். 7 ஓவர்கள் வரை இவர்கள் இருவரும் ஜோடியாகக் கட்டுப்படுத்தினாலும் டாசன் தன் கடைசி ஓவரில் 18 ரன்களை விட்டுக் கொடுத்தார். நியூஸிலாந்து அணி தாக்குதலை மீண்டும் தொடங்கிய தருணம் அது.
கப்தில் முதலில் நிதானித்து அதன் பிறகு பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார், அரைசதம் கடந்த பிறகு மலானின் நட்பு ரீதியான பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார், ஆனால் இவரிடமே பவுல்டும் ஆனார்.
19வது ஓவர் முதல் பந்தில் நியூஸிலாந்து 175 ரன்களை எட்டியதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. கடைசி ஓவரில் கரன் அருமையாக வீசி 12 வெற்றி ரன்களைக் கொடுக்காமல் 9 ரன்களுக்கு மட்டுப்படுத்தி இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆட்ட நாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார். புதன் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவை ஆக்லாந்தில் எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.