முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: சிவகங்கை கலெக்டர் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை.-  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று, மனுக்கள் மீது தீர்வுகாணும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.;
            மேலும்  இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் இயந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா வழங்கக் கேட்டல், மின் இணைப்பு தொடர்பாக மனுக்கள், பயிர் காப்பீடு வழங்கக் கேட்டல் மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் போன்ற 276 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தினார்.
          அதனைத் தொடர்நது சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்திர உதவித் தொகைக்கான ஆணையினை பயனாளி ஒரு நபருக்கும் மற்றும் மாற்றுதிறனாளி நலத்துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.58,000ஃ- மதிப்பிட்டில் மோட்டார் ஸ்கூட்டர் வண்டியும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, வழங்கினார்.            இக்கூட்டத்தில்;; அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து