முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எய்ட்ஸ் ,டி.பி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி ைவத்தார்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து  பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று, 5 பயனாளிகளுக்கு ரூ.36,700 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், தாட்கோ மூலம் 1 மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைத்திட ரூ.10,000 த்திற்கான நிதியுதவியினையும், 1 பயனாளிக்கு கண் கண்ணாடி வாங்க ரூ.500 -க்கான நிதியுதவியினையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.7,100 - மதிப்பிலான 2 பயனாளிக்கு தையல் இயந்திரத்தினையும், 1 பயனாளிக்கு ரூ.10,000 -த்திற்கான நிதியுதவியினையும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.36,700 - மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து 100 கிராமங்களில் எச்.ஐ.வி   எய்ட்ஸ்   டிபி (ர்ஐஏ யுஐனுளு வுடீ) போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வு, நோய்தடுப்பு மற்றும் நோய் சிகி;ச்சைக்கான சேவைகளை மேற்கொள்ளப்படுகிறது.
  அந்த வகையில் எச்.ஐ.வி தொற்றின் பூஜ்ஜியத்தை நோக்கி நமது கிராமம் என்கிற நோக்கத்துடன் புதியதாக பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட முதலக்கம்பட்டி, ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளிமான்கோம்பை மற்றும் மொட்டனூத்து, தேனி ஒன்றி யத்திற்குட்பட்ட குப்பிநாயக்கன்பட்டி, சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட முத்துலாபுரம் என 5 கிராமங்களை மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் அனுமதியுடன் தேர்ந்தெடுத்து எச்.ஐ.வி   எய்ட்ஸ்   டிபி பற்றி துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கலை நிகழ்ச்சி கள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.  மேலும், பிப்ரவரி 19-முதல் பிப்ரவரி 23-வரை இலவச பரிசோதனை முகாம் 5 கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.  அதற்கான பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  வெங்கடாசலம்,   கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  து.தங்கவேல் அவர்கள்,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து