எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
குல்தீப் நீக்கம்...
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்காவும் (2-1), ஒரு நாள் தொடரை இந்தியாவும் (5-1) கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென், ஜூனியர் டாலா அறிமுகம் ஆனார்கள்.
இந்தியா பேட்டிங்...
‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முற்றிலும் பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில், பேட்டர்சன் வீசிய முதல் ஓவரில் ‘ஷாட்பிட்ச்’ பந்துகளை 2 சிக்சர் மற்றும் பவுண்டரிக்கு ஓட விட்டு ரோகித் சர்மாஅமர்க்களப்படுத்தினார். இதே போல் அடுத்த ஓவரிலும் எழும்பி வந்த பந்தை அடிக்க முயற்சித்த போது ரோகித் சர்மா (21 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச் ஆனார்.
மீண்டும் ரெய்னா...
2-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னா அடியெடுத்து வைத்தார். ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய ரெய்னா, 7 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ரெய்னா 15 ரன்களில் (7 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து கோலி இறங்கினார். இதற்கிடையே தவான் 10 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது பந்து கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச்சாக சிக்கியது. இதை கவனிக்காத நடுவர் வைடு வழங்கினார். அவர்களும் அப்பீல் செய்யாததால் தப்பி பிழைத்த தவான், அதன் பிறகு ரன்மழை பொழிந்தார்.
கோலி 26 ரன்கள்...
கோலி 10 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பெஹர்டைன் கோட்டை விட்டார். இந்திய அணி 8.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. அதே சமயம் இந்த முறை நீண்ட நேரம் நிலைக்காத கோலி 26 ரன்களில் (20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷம்சியின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் பலன் இல்லை.
தவான் 72 ரன்....
இதன் பிறகு மனிஷ் பாண்டே ஆட வந்தார். மறுமுனையில் அரைசதத்தை கடந்து மிரட்டிய தவான் தனது பங்குக்கு 72 ரன்கள் (39 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். இறுதிகட்டத்தில் இந்தியாவின் ரன்வேகம் சற்று தளர்ந்து போனது. 220 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோர் கடைசியில் 200 ரன்களை கடப்பதே பெரிய விஷயமாகி விட்டது. பாண்டே, டோனி ஜோடி தடுமாறியதே இதற்கு காரணம். டோனி 16 ரன்களில் (11 பந்து, 2 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. மனிஷ் பாண்டே (29 ரன், 27 பந்து, ஒரு சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா (13 ரன், 7 பந்து, 2 பவுண்டரி) களத்தில் நின்றனர்.
புவனேஷ் அசத்தல்...
பின்னர் பவுண்டரியுடன் தங்களது ரன் கணக்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் ஸ்மட்ஸ் (14 ரன்), கேப்டன் டுமினி (3 ரன்) கேட்ச் ஆனார்கள். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ரீஜா ஹென்ரிக்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து குடைச்சல் கொடுத்தார்.
அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்ட போது, 18-வது ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் அவர் ஹென்ரிக்ஸ் (70 ரன், 50 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), கிளாசென் (16 ரன்), கிறிஸ்மோரிஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கபளகரம் செய்ததுடன், அந்த ஓவரில் பேட்டர்சன் ரன்-அவுட்டும் ஆனார். அத்துடன் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி நம்பிக்கை முழுமையாக தகர்ந்தது.
இந்தியா வெற்றி
20 ஓவர்கள் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் தான். அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,