முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடனை வாங்கி விட்டு தப்பியோடும் தொழிலதிபர்கள்: அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் தொழிலதிபர்களோ கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பியோடுவது தொடர்பான பொதுநல வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாணைக்கு ஏற்றது.

வழக்கறிஞர் விநீத் தண்டா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அவசர வழக்காக தாக்கல் செய்தார். அதில் விவசாயக்கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 11,500 கோடி கடன் வாங்கிவிட்டு தொழிலதிபர் நீரவ் மோடி நாடு தப்பிய நிலையில், அவரை நாட்டிற்கு திரும்ப கொண்டு வருவது பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை.

மக்களின் உரிமைகள் காக்கப்பட இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். நாடு முழுவதிலும் வங்கிகளிடம் விவசாயக் கடன்களை வாங்கிய விவசாயிகள் அவற்றை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதையும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

பி.என்.பி மோசடியில் தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவருடைய உறவினர் மேகுல் சௌக்சி நீண்ட காலமாக இந்த மோசடியை செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் வெளிவரும் முன்னர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார் என்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீரவ் மோடி மட்டுமல்ல இதற்கு முன்னர் விஜய் மல்லையா, கேடன் பரேக் மற்றும் ஹர்ஷத் மேத்தா என பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. இவர்களின் மோசடி அதிகாரத்தில் இருப்பவர்களின் துணை இல்லாமல் நடந்திருக்காது.

இந்த பொதுநல மனுவில் நிதியமைச்சகம், சட்டத்துறை, ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவற்றையும் மனுதாரர் சேர்த்துள்ளார். தப்பியோடிய நீரவ் மோடியை இரண்டு மாதத்தில் நாட்டிற்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தண்டா கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரிடம் இருந்து பணத்தை மீட்க வேண்டும் என்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த பி.என்.பி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் அதிக தொகையை கடனாக அளிப்பதற்கான புதிய வழிமுறைகளையும், அவற்றை மீட்பதற்கு கடுமையான நடைமுறைகளையும் செயல்படுத்த வேண்டும் என்றும் தண்டா கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கறிஞர் தண்டாவின் இந்த பொது நல மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை இந்த அவசர மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து