முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஆண்டுதோறும் 28 நாட்களுக்குள் 6 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஆய்வில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள் இறந்து விடுவது யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகிலேயே, பிறந்த சிசுக்களின் உயிரிழப்பில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், இந்த சிசுக்களின் உயிரிழப்புகள் 80 சதவீத அளவுக்கு குணப்படுத்தக்கூடிய நோய்களாலேயே நிகழ்வதாகவும், சிசுக்களின் மரணம் எந்த மோசமான நோயின் காரணமாகவும் ஏற்படுவதில்லை என்ற அதிர்ச்சி தகவலும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் சிசுக்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 6 லட்சம் சிசுக்கள் மரணம் அடைகின்றன. இது உலக அளவில் நிகழும் சிசு மரணத்தில் கால்பங்காகும் என்றும் யூனிசெப் கூறியுள்ளது.

184 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா 31-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மிக மோசமான சிசுக்கள் மரணத்தைக் கொண்டிருந்ததால் இந்தியா 28- வது இடத்தில் இருந்தது. உலக அளவில், ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் அதில் 19 சிசுக்கள் ஒரு மாத காலத்தக்குள் மரணித்து விடுவதாகவும், பிறந்த சிசுவுக்கு முதல் ஒரு மாத காலம்தான் மிக முக்கியமான தருணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து