முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். தலைவர் ராகுல் காந்தி பற்றி பா.ஜ.க எம்.பி. கடும் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

கோன்டா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘குரைக்கும் நாய்’ என்று பா.ஜ.க எம்.பி. பிரிஜ் பூஷன் ஷரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வைர வியாபாரியான நிரவ் மோடி வங்கி மோசடி தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கூறுகையில்,
பிரதமர் மோடி வங்கி மோசடி குறித்து வாய் திறக்க மறுக்கிறார். ஆட்சிக்கு வரும்போது, நாட்டின் காவலாளியாக இருப்பேன் என்றார். தானும் ஊழல் செய்யமாட்டேன், மற்றவர்களையும் ஊழல் செய்யவிடமாட்டேன் என்றார். ஆனால், இவர் ஆட்சியில்தான் லலித் மோடி, மல்லையா, நிரவ் மோடி தப்பிச் சென்றனர் என விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தரப்பிரதேச மாநில  பா.ஜ.க எம்.பி. பிரிஜ் பூஷன் ஷரண் நிருபர்களிடம் கூறுகையில்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குரைக்கும் நாய் போன்றவர். நாய் குரைப்பது போல், அவர் எப்போதும் ஏதாவது விமர்சித்துக்கொண்டே இருப்பார். ஆனால், பிரதமர் மோடி யானை போன்றவர். நாய் குரைத்தாலும், யானை அதன்போக்கில் கண்டுகொள்ளாமல் போய்கொண்டே இருக்கும். பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். ஆதலால், யாரெல்லாம் குரைக்க முடியுமோ அவர்கள் குரைக்கலாம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது, அனைத்து விதமான ஊழல்களும் நடந்தன. ஆதலால் ராகுல் காந்தி ஊழல் குறித்து எந்தவிதமான விளக்கமும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை கேட்க உரிமை இல்லை. இப்போதுள்ள மோடி தலைமையிலான அரசு காங்கிரஸ் அரசின் ஊழல்களை விசாரித்து வருகிறது. அதனால், ஊழல்கள் அனைத்தும் வெளிப்பட்டு வருகிறது. தன்னுடைய மைத்துனர் ராபர்ட் வத்ரா, தாய் சோனியா காந்தி ஆகியோரின் ஊழல்கள் ஏதும் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ராகுல் காந்தி அலறுகிறார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து