எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில் எம்மா கோன்ஸலஸ் என்ற 18 வயது மாணவி பேசிய பேச்சு, உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும் பேசிய அந்த மாணவி, அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தையும், துப்பாக்கி கலாச்சாரத்தையும் வெளுத்து வாங்கினார். இது குறித்து அந்த மாணவி பேசியதாவது,
புளோரிடாவில் துப்பாக்கி வாங்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. துப்பாக்கி உரிமமும் தேவையில்லை. அதை வாங்கிய பிறகு பதிவு செய்ய வேண்டியதும் இல்லை. எங்கும் எடுத்துச் செல்லலாம். யாரும் கேட்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் எத்தனை துப்பாக்கிகளையும் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும். இதுதான் நிலைமை.
ஆஸ்திரேலியாவில் கடந்த 1999-ம் ஆண்டு போர்ட் ஆர்தரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. உடனே துப்பாக்கி கட்டுபாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு அங்கு துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை. ஜப்பானில் துப்பாக்கிச்சூடு நடந்ததே இல்லை. கனடாவில் 3 முறையும் இங்கிலாந்தில் ஒரு முறையும் நடந்தது. இரு நாடுகளிலும் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இங்கு இன்னமும் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருக்கிறது. அரசு இப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாணவர்கள் தொடர்ந்து தோட்டாவுக்கு பலியாக வேண்டியதுதான்.
அதிபர் டிரம்ப் நேரில் வந்து என்னிடம், ``இது மிகவும் துயரமான சம்பவம், இனிமேல் இதுபோல் நடக்காது..'' என சொல்ல விரும்பினால், அவரிடம் நான் ஒன்றை கேட்பேன். ``தேசிய துப்பாக்கி கழகத்திடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்..?'' எனக் கேட்பேன். அவர் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அது எனக்கே தெரியும். 3 கோடி டாலர்கள். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் துப்பாக்கிச்சூடுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், ஒருவருக்கு 5,800 டாலர் வருகிறது. ஒருவரின் உயிரின் மதிப்பு அவ்வளவுதானா மிஸ்டர் டிரம்ப்? இப்போதாவது நடவடிக்கை எடுங்கள்.
தேசிய துப்பாக்கி கழகத்திடம் நன்கொடை வாங்கும் ஒவ்வொரு அரசியல்வாதியையும் கேட்கிறேன். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் வாங்கிய பணம் உறுத்தவில்லையா? அப்படி உறுத்தினால் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இந்த ஒருமுறையாவது நல்லது செய்ய முன்வாருங்கள். கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமலில் இருந்த மனநலம் பாதித்தவர்கள் துப்பாக்கி வாங்குவதை தடை செய்யும் சட்டத்தை அதிபர் டிரம்ப் மாற்றினார். இதை அவர் செய்யாமல் இருந்திருந்தால், இத்தனை உயிர் போயிருந்திருக்காது. சொகுசு நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கும் நம் செனட்டர்களும் எம்.பிக்களும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது என்கிறார்கள். இது அபத்தம்.
இவ்வாறு அந்த மாணவி பேசினார். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.