முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் இரு பதவி வகிப்போர் ஒரு பதவியை ராஜிநாமா செய்ய உத்தரவு

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, தி.மு.க.வில் இரு பதவிகள் வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் கள ஆய்வில் பங்கேற்போர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் தலைமைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் பல நிர்வாகிகள் இரு பதவிகளில் இருப்பது தெரிய வருகிறது. எனவே, இரு பதவிகள் வைத்திருக்கும் தி.மு.க.வினர் தாமாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜினாமா செய்து மாவட்டச் செயலாளர்களிடம் உடனடியாக கடிதம் அளிக்க வேண்டும்.

அதனை மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்வதோடு, அப்படி ராஜினாமா செய்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் விவரங்களை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து