முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி பற்றி பேச கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த தகுதியும் இல்லை - அமித் ஷா கடும் தாக்கு

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : ஊழல் ஆட்சி நடத்திவரும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் சுற்றுப்பயணமாக மங்களூரு வந்தார். குக்கே சுப்பிரமணியா, உடுப்பி கிருஷ்ணா உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். மங்களூருவில் சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட பா.ஜ.க தொண்டர் தீபக் ராவின்வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..இதனை தொடர்ந்து மங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது,

 நாடு முழுவதும் கிடைத்துள்ள பா.ஜ.கவின் வெற்றி கர்நாடகாவிலும் தொடரும். ஊழல் ஆட்சி நடத்திவரும் சித்தராமையாவுக்கு மோடி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை - அமீத் ஷா

மத்திய அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட நிதியை கர்நாடக அரசு முறையாக பயன்படுத்தவில்லை. முதல்வர் சித்தராமையாவுக்கு முறையாக ஆட்சி நடத்த தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, இங்கு 10 சதவீத கமிஷன் ஆட்சி தான் நடந்துக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் தினமும் புதுப்புது ஊழல் புகார்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஏராளமான மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன.

கர்நாடக மக்கள் வளர்ச்சியை விரும்புவதால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகி விட்டது. நாடு முழுவதும் கிடைத்துள்ள பா.ஜ.கவின் வெற்றி கர்நாடகாவிலும் தொடரும். ஊழல் ஆட்சி நடத்திவரும் சித்தராமையாவுக்கு மோடி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. சித்தராமையாவின் ஆணவ பேச்சுக்கு, தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து