முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த காலகட்டத்தில், மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டை பெற, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில், அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக அவருக்கு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் லஞ்சம் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து