முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தர பிரதேசத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம்: பிரதமர் மோடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.20,000 கோடி முதலீட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் 2 நாள் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது,

நாட்டில் இரு இடங்களில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையங்கள் அமையவிருப்பதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது. அதில் ஒரு மையத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ. 20,000 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் இந்த மையம் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதேபோல, ஜேவார், குஷிநகர் ஆகிய இரு நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமையவிருக்கின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து