முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தில் உடன்பாடில்லை: ரஷ்யா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: சிரியாவில் 30 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலியுறுத்தும்  தீர்மானத்தில் உடன்பாடில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

வியாழக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் 48 பேர் பலியாகினர். தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவி குழுக்களை அங்கு அனுமதிக்க கூறியும் குவைத்தும், சுவீடனும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை கொண்டு வந்தது.

ஆனால் இந்த தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ரஷ்யா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ரஷ்ய தூதர் வாசிலி நெபன்சியா கூறியபோது, இந்தத் தீர்மானத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் உள்ளது “ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து