முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மீளாய்வு கூட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      கடலூர்
Image Unavailable

கடலூர்கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மீளாய்வு கூட்டம் கலெக்டர்  வே.ப.தண்டபாணி   தலைமையில்  நடைபெற்றது.

மீளாய்வு கூட்டம்

இக்கூட்டத்தில் கலெக்டர்  வே.ப.தண்டபாணி   தெரிவித்தாவதுகுழந்தைகள் நலக்குழு மீளாய்வு குழு கூட்டத்தில் குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தப்படும் குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் அவற்றை களைவது பற்றியும்இ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர்  விரிவாக கலந்தாலோசனை செய்து உரிய அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்  கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்  ஆகியவற்றின் செயல்பாடுகள,ஆதரவற்ற குழந்தைகள் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள், சைல்டு ர்நடி டுiநெ 1098 ஆகியவை குறித்து கேட்டறிந்து மேலும் சிறப்பாக செயல்பட தகுந்த ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) எஸ்.கணேஷ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.திருமாவளவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  வை.ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர்  ஜெயந்தி ரவிச்சந்திரன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சகோதரி டெய்சி, திருமதி துர்கா மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் வெங்கடேசன், நன்னடத்தை அலுவலர் பிரபு, காவல்துறை குற்றபிரிவு ஆய்வாளர் சித்ரா, மாவட்ட சமூக நல அலுவலகத்தை சேர்ந்த இளமதி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் முகுந்தன். மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அலுவலர்  செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து