முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் நிறுவனத்தை திவால் என அறிவிக்க மனு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக முழுமையாக முடங்கியது. இதனால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். ஆத்திர அவசரத்திற்குக் கூட மற்றவர்களை தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் படிப்படியாக சரிசெய்யப்பட்டது, தற்போது  சிக்னல் கிடைக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் ஏர்செல்லுக்கும், டவர் நிறுவனங்களுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரூ.15 .5 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டதால் ஏர்செல்  நிறுவனத்தை  திவால் என அறிவிக்க கோரி  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஏர்செல் சார்பில் மனு செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து