எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : ஐபிஎல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2018-ம் ஆண்டு சீசனில் கேப்டனாக தமிழரும், சென்னையைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது, 2-வது தமிழர் கொல்கத்தா அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்தமாதம் தொடங்க உள்ளது. கடந்த மாதம் பெங்களூருவில் நடந்து முடிந்த ஏலத்தில் பல்வேறு அணிகளின் வீரர்கள் மாறினர் என்பதால், கேப்டன்களை நியமிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து வந்த கவுதம் கம்பீரை இந்த முறை ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி எடுத்துக்கொண்டது இதனால், அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேச்சு எழுந்தது, இது தொடர்பாக அவரும் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அனுபவ வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்து நேற்று கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை நிர்வாகி வெங்கி மைசூர் கூறுகையில், ‘நீண்ட காலத்தில் ஒரு மாற்றம் அணிக்கு வேண்டும் என்பதால், தினேஷ் கார்த்திக்கை 2018-ம் ஆண்டு சீசனுக்கு கேப்டனாக நியமித்துள்ளோம், அதேசமயம், கவுதம் கம்பீர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பவும், அதை சிறப்பாகச் செய்யவும் இவர் தகுதியான வீரர்.
மேலும், கேப்டன்களாக கிறிஸ் லின், ராபின் உத்தப்பா பெயரும் பரிசீலிக்கப்பட்டதில் தினேஷ் கார்த்திக் தகுதியான நபராக இருந்தார். இதனால், ராபின் உத்தப்பாவை துணை கேப்டனாக நியமித்துவிட்டோம்’ எனத் தெரிவித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் கூறுகையில், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமையாக இருக்கிறது. மிகச்சிறந்த அணிக்கு தலைமை ஏற்கிறேன். புதிய சவாலை எதிர்நோக்கி இருக்கிறேன். அனுபவம் நிறைந்த வீரர்களும், இளம் வீரர்களும் கலந்த அணியுடன் விளையாடுவதில் உற்சாகமாக இருக்கிறேன். தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் காலிஸின் பயிற்சியும் எங்களை சிறப்பாக விளையாட துணை புரியும்’ எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தார்.
இது வரை 10 ஐபில் சீசனில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 152 போட்டிகளில் 2ஆயிரத்து903 ரன்கள் சேர்த்துள்ளார். 14 அரைசதம் அடித்துள்ளார். 88 கேட்சுகள், 26 ஸ்டெம்பிங் செய்துள்ளார். இதற்கு முன் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டு 2009-10 ஆம் ஆண்டு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். துலீப் டிராபி போட்டியில் கடந்த ஆண்டு இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் அந்தப் போட்டியில் கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.
கொல்கத்தா அணியில் இந்த முறை வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்ஷெல் ஸ்டார்க், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று மிரட்டல் நாகர்கோட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி விவரம்:
தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ராபின் உத்தப்பா(துணைக் கேப்டன்), சுனில் நரேன், ஆன்ட்ரூ ரூஷெல், கிறிஸ் லின், மிட்ஷெல் ஸ்டார்க், குல்தீப் சிங் யாதவ், பியூஷ் சாவ்லா, நிதிஷ் ரானா, கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மவி, மிட்ஷெல் ஜான்சன், சுப்மான் கில், ரங்கநாத் வினய் குமார், ரிங்கு சிங், கேமரூன் டெல்போர்ட், ஜேவன் சீர்லெஸ், அபூர்வ் விஜய் வான்கடே, இசாங் ஜக்கி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.