எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ரூ.24,95,687/- மானியத்திலான அம்மா இரு சக்கர வாகனத்தினை வழங்கினார்.விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பேசியதாவது-
அம்மா இரு சக்கர வாகனம்
புரட்சித்தலைவி அம்மா பெண்களின் நலனுக்காகவும், பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். புரட்சித்தலைவி அம்மா வேலைக்கு செல்லும் மற்றும் சொந்தமாக தொழில் செய்யும் உழைக்கும் மகளிர்கள் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்து செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல், தங்களது அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் செய்திட ஏதுவாக, ஆண்டிற்கு ஒரு லட்சம் மகளிருக்கு 50 சதவித மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள். பாரத பிரதமர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழகம் முழுவதும் ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை 24.02.2018 தொடங்கி வைத்தார்கள்.அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் 8 மகளிர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 14 மகளிர்களுக்கும், பேரூராட்சி பகுதிகளில் 34 மகளிர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 44 மகளிர்களுக்கும் ஆக மொத்தம் 100 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.24.96 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களை பெறும் மகளிர்கள் தங்களது பணிகளையும், தொழில்களையும் சிறப்பாக செய்து வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார். விழாவிற்கு தலைமை வகித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது-தமிழ்நாடு அரசு வேலைக்கு செல்லும் பெண்களின் பல்வேறு சிரமங்களை குறைக்கும் வகையில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. பெண்கள் படித்ததற்கு பிறகு வேலைக்கு செல்லவும், வரவு செலவுகளை சுதந்திரமாக செய்திடவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் வீட்டில் குழந்தைகளை கவனிக்கவும், சமையல் பணிகளையும், குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை வீட்டில் செய்து முடித்து விட்டு, பணிகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உழைக்கும் மகளிர்களின் சிரமங்கள் குறைந்து விரைவாக பணிகளை முடிக்க முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். இன்று 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 125 சிசிக்கு குறைவில்லாத வாகனங்கள் ஜனவரி 2018-க்கு பின்பு தயார் செய்யப்பட்ட வாகனங்களை வாங்க வேண்டும். விண்ணப்பிக்கும் மகளிருக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மகளிரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு குறைவாக இருந்திட வேண்டும். இந்த விதிமுறைகளின் அடிப்படையில், இவ்வாண்டில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், ஆதரவற்றோர், விதவை, மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட முன்னுரிமை பெற்றோருக்கும், மற்ற மகளிருக்கும் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டோருக்கு வழங்கப்படும். வாகனத்தின் விலையில் 50 சதவிதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் கடன் பெற்று, வாகனம் வாங்குவோருக்கு மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இன்று வாகனம் பெறும் நீங்கள் இதை நல்லபடியாக பயன்படுத்தி, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன், அ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல்முருகன், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் சேர்மன் ரமேஷ், கூட்டுறவு பேராங்காடித் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அக்ரோ சேர்மன் மகபூப் ஜான், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், திருநெல்வேலி கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் செவல் முத்துசாமி, முக்கிய பிரமுகர்கள் சுதா பரமசிவம், பரணி சங்கரலிங்கம், தச்சை மாதவன், ஜெரால்ட், சேர்மபாண்டி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.