எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலகு சார்பில், மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), ஆகியோர் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்து, 134 உழைக்கும் பெண்களுக்கு ரூ.33.50 இலட்சம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனத்தினை வழங்கினார்கள்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது
‘பெண்கள் நினைத்தால், தங்கள் தலையெழுத்தை மட்டுமல்ல மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும். அவர்களுக்கு தேவை, வாய்ப்புகள்! அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே எனது இலட்சியம்” என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அமுதமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கான வாய்ப்புகளை அளித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் 16.02.2017 அன்று பதவியேற்றவுடன் முதலில் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் முதல் திட்டமான ‘அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்திற்கு” கையெழுத்திட்டு, புரட்சித் தலைவி அம்மா பிறந்த நன்நாளான 24.02.2018 அன்று பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரால் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது.
உழைக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, 50 சதவீத மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் முற்றிலும் மகளிருக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளை சார்ந்த உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க (யுரவழ பநயச / புநயசடநளள 125உஉ க்கு மிகாமல்) மானியத்தொகை, ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மூலம் மானியமாக வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கு 2017-18ம் நிதியாண்டில் “அம்மா இருசக்கர வாகனம்” வழங்கும் திட்டமானது, 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1,550 வாகனங்களும், ஈரோடு மாநகராட்சியில் 746 வாகனங்களும், 4 நகராட்சிகளில் 213 வாகனங்களும், 42 பேரூராட்சிகளில் 703 வாகனங்களும் என மொத்தம் 3,212 வாகனங்கள் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 134 பயனாளிகளுக்கு ரூ.33.50 இலட்சம் மானிய விலையில் ‘அம்மா இருசக்கர வாகனம்” வழங்கப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மா ஏழைகள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய அடித்தள மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ளார்கள். ஏழை எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடிதள மக்களுக்கு கைகொடுத்து, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதில் அளவற்ற அக்கறை கொண்டு, தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் புரட்சித்தலைவி அம்மா .
ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக பத்தாவது படித்த பெண்களுக்கு ரூ.25,000 திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டையம் படித்த பெண்களுக்கு ரூ.50,000 திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியுள்ளார்கள். மாணவ மாணவியருக்கு 14 வகையான கல்வி உபபொருட்கள், கட்டணமில்லா பேருந்து வசதி என புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பல்வேறு கல்வித் திட்டங்களால் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா கறவைப்பசு வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என எண்ணற்ற நலத்திட்டங்களை ஏழைகளுக்காக வாரி வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா .
இத்திட்டத்தினால் உழைக்கும் மகளிர் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல் தங்களது அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் செய்யவும் இயலும்.
எனவே உழைக்கும் பெண்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இச்சிறப்பு திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தினைத்தினையும், பொருளாதாரத்தினையும் உயர்த்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது.
புரட்சித்தலைவி அம்மா பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்த நாளில் உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தை துவக்கி வைத்தார்கள். ஈரோடு மாவட்டம் மகளிர் திட்டம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட ஏழை எளிய மகளிரின் நீடித்த நிலைத்த வாழ்வாதாரத்தை மேம்பாடுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கி, குடும்ப வருமானத்தை பெருக்கி வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
புரட்சித்தலைவி அம்மா அரசு பெண் ஊழியாகளுக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு, ஏழை, எளிய பெண்கள் கர்ப்பகாலத்தில் யாரையும் சாராமல் இருக்க பேறுகாலத்தில் வழங்கி வந்த ரூ.12,000 நிதியுதவியினை ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கியதோடு, குழந்தை பிறந்தவுடன் 16 வகை பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தினை வழங்கியுள்ளார்கள். பச்சிளங்குழந்தையுடன் பெண்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் சிரமப்படக்கூடாது என்பதற்காக பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, பெண்களுக்கென காவல் நிலையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12,076 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,70,000 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் மொத்த சேமிப்பு ரூ.215 கோடி. 2017-18-ம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனாக இதுவரை ரூ.160 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு ரூ.2.25 கோடி ஊக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் துவங்கப்பட்டு இதுவரை ரூ.18 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 3,298 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு தனி நபர் கடனாக ரூ.3.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 1105 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ1.68 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 671 புதிய மகளிர் சுய அமைக்கப்பட்டு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி நடத்திட ரூ.80 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 403 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது மகளிராகிய நீங்கள் அரசு வழங்குகின்ற பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுவதோடு, தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதோடு, எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், மகளிர் திட்ட இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் ஆர்.சீனிவாசன், உதவி திட்ட அலுவலர்கள் இரா.சாந்தா, சுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.