முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிடிவி தினகரனை அதிமுக தொண்டர்கள் செருப்பால் அடிக்கற காலம் விரைவில் நடக்கும் வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.பி. கோ.அரி ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

டிடிவி தினகரனை அதிமுக தொண்டர்கள் செருப்பால் அடிக்கற காலம் விரைவில் நடக்கும் வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.பி. கோ.அரி ஆவேசம். வாலாஜாவில் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டம்

நிகழ்ச்சிக்கு வாலாஜா நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். நகர அவைதலைவர் மணி, நகர பொருளாளர் பஷீர், நகர துணை செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பூங்காவனம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ரமணா, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் தையல் இயந்திரம், வேட்டி சேலைகள் வழங்கினர்.

கூட்டத்தில் எம்.பி.அரி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற கட்சி அதிமுக மட்டும் தான். எதிர்கட்சியில் பிறந்த நாள் என்றால் அவர்கள் உண்டியலைதான் வைப்பார்கள். ஜெயலலிதா அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய நல்ல மனிதர்களை தமிழ்நாட்டிற்கு அடையாளம் காட்டி சென்றுள்ளார். 2011ம் ஆண்டு அதிமுக இயக்கத்தில் இருந்து ஜெயலலிதா சசிகலா, தினகரன், திவாகரன், பாஸ்கரன் மற்றும் அவர்களின் குடுத்தார்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து விலக்கிவைத்தார்கள். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து தினகரன் அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் நினைக்கிறார். ஜெயலலிதா ஆன்மா தினகரனை மன்னிக்காது. உயிரை தந்து இந்த ஆட்சியை தந்து இருக்கிறார் ஜெயலலிதா. பல லட்சக்கணக்கான தொண்டர்கள் உழைத்து இந்த ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் அப்படி இந்த ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொன்னால் அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் டிடிவி தினகரனை செருப்பால் அடிக்கிற காலம் விரைவில் நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முகமதுஜான், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட அவைதலைவர் நந்தகோபால், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஏ.எல்.விஜயன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சிவராஜ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் துரைவேலு, பொதுக்குழு உறுப்பினர் வலிஅகமது, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பூண்டி பிரகாஷ், நகர மாணவர் அணி செயலாளர் வி.பி.நாராயணன்,முன்னாள் தொகுதி செயலாளர் முனிசாமி, முன்னாள் நகரமன்ற தலைவர் சித்ராசந்தோஷம், நகர செயலாளர்கள் மணி, இப்ராகிம் கலிலூல்லா, மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட, பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட எம்ஜிஆர்மன்ற இணைசெயலாளர் கருணாமூர்த்தி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து