முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணத்தில்: மகளீர் தினத்தில் ஆறுபேருக்கு விருது வழங்க ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      வேலூர்

அரக்கோணத்தில் வருகிற 8ந்தேதி தேசிய மகளீர் தினத்தன்று ஆறு முக்கிய நபர்களுக்கு கல்விநிறுவனம் ஒன்று விருதுகள் வழங்கி கவுரவபடுத்த உள்ளது. இதுகுறித்து விவரம் வருமாறு.

தேசிய மகளீர் தினவிழா

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் வருகிற 8ந்தேதி தேசிய மகளீர் தினவிழா ஒன்றை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு உள்ளது. அத்துடன் நகரின் முக்கிய ஆறு பெண்மணிகளை தேர்வுசெய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரபடுத்தவும் உள்ளது.

அந்த விருதுகள் பெரும் ஆறு நபர்களின் விவரங்கள் வருமாறு. நெ1.அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் கோ.கமலகுமாரி, நெ2.அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.ஜீவா, நெ3.அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுஜாதேவி, நெ4.கைனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் கோ.உமாமகேஸ்வரி, நெ5.பொன்னியம்மாள் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் ஆர்.உஷா, நெ6.பிரேம் ஆதரவற்ற விடுதி, காப்பாளர் ஏ.சந்தானமேரிஆகியொர் அடங்குவர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவன நிர்வாக குழு உறுப்பினர் டிஎஸ்..லீலாவதி சுப்பிரமணியம் தலைமை தாங்கவும். மற்றொரு நிர்வாக குழு உறுப்பினர் டிஆர்.கவிதா இரவிக்குமார் முன்னிலை வகிக்கவும் இசைந்து உள்ளனர். ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் டாக்டர் டிஆர்.சுப்பிரமணியம் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

வுpழா ஏற்பாடுகளில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவன செயலாளர் டிஆர்எஸ்.இரவிக்குமார், அறங்காவலர் டாக்டர் சந்திரமௌலி மற்றும் இயக்குனர் சாம்பமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து