முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் நெருக்கடி நிலை: அரசு செயலிழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு செயலாற்ற தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

மோதல் போக்கு
இலங்கையில் கடந்த ஓராண்டு காலமாக, பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை இனத்தவராகிய இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

புத்த மதத்தினர் எதிர்ப்பு
மியான்மரில் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை ரோஹிங்யா  முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உள்ள நிலையில், ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைவதற்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மத்திய கண்டி மாவட்டத்தில் இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.

நெருக்கடி நிலை...
இதன்காரணமாக தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டது. இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில்,  நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரசு மீது விமர்சனம்

இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியதற்கு, ஆளும் சிறிசேனா அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அரசு செயலிழந்து விட்டதாக கூறியுள்ள எதிர்க்கட்சிகள், போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளன. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி மதக்கலவரத்தை கட்டுப்படுத்த போதிய ஆர்வம் காட்டவில்லை என விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து