முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் வாங்கி தருவதாக மோசடி- ரூ.15 லட்சத்துடன் தப்பிய வாலிபர் கைது

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      சென்னை

பெரம்பூரில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சத்துடன் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் பெரியார்நகரை சேர்ந்தவர் குமார். குடிநீர் சுத்திகரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவர் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.25 லட்சம் தேவைப்பட்டது.

கைது

 அவரிடம் ரூ.15 லட்சம் இருந்ததால் மீதி தொகை ரூ.10 லட்சத்தை கடனாக வாங்கி தரும்படி தனது நண்பர் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தை சேர்ந்த லோகேசிடம் கூறினார். அவர் அம்பத்தூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும், ஆனால் ரூ.15 லட்சத்தை அவரிடம் காட்டினால்தான் கடன் தருவார் என்று லோகேஷ் கூறினார். இதையடுத்து நேற்று மூன்தினம் இரவு ரூ.15 லட்சத்துடன் குமார் அம்பத்தூர் சூரப்பட்டுக்கு சென்றார்.

அவரிடம், லோகேஷ் ரூ.15 லட்சத்தை வாங்கி கடன் கொடுப்பவரிடம் காட்டி விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் பணத்துடன் மாயமாகி விட்டார். இதுகுறித்து குமார் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொற்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். லோகேசின் செல்போன் சிக்னல் வைத்து செங்கல்பட்டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து