முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் தற்கொலை தாக்குதலில் 9 பேர் பலி

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கனில் பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது,
தலைநகர் காபூலில் ஷியா பிரிவினர்அதிகம் வசிக்கும் பகுதியை குறி வைத்து இந்த தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தலிபான்களால் கொல்லப்பட்ட ஷியா ஹசாரா இனக்குழு தலைவர் அப்துல் அலி மஸாரியின் 23-ஆவது நினைவு நாள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, உடலில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து எடுத்து வந்த பயங்கரவாதி அதனை மக்கள் நெருக்கம் மிகுந்த அப்பகுயில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார். இதில், 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 18 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் இருவர் காவல் துறை அதிகாரிகள் மற்றவர்கள் பொதுமக்கள்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.

காபூல் நகரத்தில் கடந்த இரு வாரங்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்தும் 3-ஆவது தற்கொலைத் தாக்குதல் இதுவாகும். ஆப்கன் அரசு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சன்னி பிரிவைச் சேர்ந்த தலிபான்கள் ஷியா பிரிவினரை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து