எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெனிவா: உலக அளவில் மனித இனத்தை அச்சுறுத்துக்கூடிய உயிர்கொல்லி நோயாக டிசீஸ் எக்ஸ் என்ற பெயர் தெரியாத புதிர் நோய் பரவலாம் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.
இதுவரை அந்த நோயின் தீவிரத்தையும், எதிர்ப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்காத நிலையில், இதற்கு டிசீஸ் எக்ஸ் என்று நார்வே நாட்டின் அறிவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர். எதிர்காலத்தில் மனித இனத்தை அச்சுறுத்தும் நோயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அச்சுறுத்தும் நோய்களை பட்டியலிட்டது.
அதில் எபோலா, லாசா பீஃவர், சிசிஎச்எப் ஹீமோராஜிக் ஃபீவர், நிபா, மெஸ், சார்ஸ், எபோலா, டிசீஸ் எக்ஸ் என்ற புதிய நோயையும் அறிவித்துள்ளனர்.
இந்த டிசீஸ் எக்ஸ் நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘ இந்த டிசீஸ் எக்ஸ்’ நோய் சர்வதேச அளவில் மிகப்பெரிய கொள்ளை நோயாக உருவெடுக்கும். ஆனால், மனித இனத்துக்கு எந்தவிதமான பாதிப்பை உண்டு செய்யும் என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து நார்வே நாட்டின் அறிவியல் அறிஞரும், உலக சுகாதார அமைப்பின் ஆலோசகருமான, ஜான் அர்ன் ராட்டிங்ஜென் கூறியதாவது:
இதற்கு முன் இதுபோன்ற நோயை நாங்கள் பார்த்தது இல்லை. அதன் காரணமாகவே இந்த நோய்க்கு “எக்ஸ்” எனபெயரிட்டுள்ளோம். டிசீஸ் எக்ஸ் நோய் உலகளவில் மக்களின் நலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.
இந்த நோய் குறித்த ஆய்வும், கண்காணிப்பும், அதைத் தடுக்கும் முறையும் இனி அவசியம். ஆனால், விரைவில் நோயின் தீவிரத் தன்மையை ஆய்வு செய்து, எப்படி உருவாகிறது என்பதை அறிந்து, அதற்குரிய தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்போம்.
மனிதனால் உருவாக்கப்படும் வைரஸ், நோய் என்பது மிகவும் கொடுமையானது, ஆபத்தானது. ஏனென்றால், இந்த நோய் எப்படி உருவாகிறது, எந்த வைரஸில் இருந்து உருவாக்கினார்கள், இதற்கு தடுப்பு மருந்து என்ன என்பதை கண்டுபிடிக்கவே ஆண்டுகள் ஆகலாம்.
புதிதாக உருவாகும் வைரஸ் அல்லது நோய்க்கு ஏற்றார்போல் மனித உடலுக்கு எதிர்ப்பு சக்தி உடனடியாக உருவாகாது. இதற்குரிய தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முன் லட்சக்கணக்காண மக்களுக்கு பரவிவிடும்.
சிந்தடிக் பயாலஜி எனும் முறை, புதிய உயிர்கொல்லி வைரஸ் நோய்களை கண்டுபிடிக்கும் முறையை அனுமதிக்கிறது. இந்த முறையின் மூலம் புதிய வைரஸ் அல்லது நோயை கண்டுபிடித்து மக்களிடையே பரப்பினால், மிகவேகமாக பரவும்.
ஆனால், இந்த டிசீஸ் எக்ஸ் நோய் இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையாக உருவானதா என்பதே தெரியவில்லை. ஆனால், இயற்கையாக உருவானதாக இருக்கலாம் என நம்புகிறோம். இதற்கு முந்தைய ஸ்பானிஷ் ஃபுளு, எச்ஐவி போன்றுகூட இருக்கலாம். மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான அதீத தொடர்பு மூலம் இந்த நோய் வந்திருக்கலாம்.
ஜிகா வைரஸும் முதலில் இப்படித்தான் அஞ்சப்பட்டது, முதலில் நூற்றுக்கணக்கில் ஆப்பிரிக்காவில் மக்களை கொன்று குவித்தது, இப்போது, ஆயிரக்கணக்கில் மக்கள் மடிகிறார்கள். இன்னும் தடுப்பு மருந்து முழுமையாக கண்டுபிடிக்கவில்லை.
உலக நாடுகள் தங்களின் ஆய்வுகளை தீவிரப்படுத்தி, எதிர்கால நோயான டிசீஸ் எக்ஸ் நோய்காகன தடுப்பு மருந்துகளையும், அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
டிசீஸ் எக்ஸ் நோய் இயற்கையால் உருவாகாமல், மனிதனால் உருவாக்கப்பட்ட நோயாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள், உயிர்கொல்லி ஆயுதங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியாலும் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் கூட இதுபோன்ற உயிரி ரசாயன குண்டுகள் வீசப்பட்டு மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசீஸ் எக்ஸ் என்றால் என்ன?
டிசீஸ் எக்ஸ் என்பது இதுவரை பெயரிடப்படாத ஒருவகையான நோய். முதல் முறையாக உலக சுதாகார அமைப்பு இந்த நோயை பட்டியலிட்டுள்ளது. மனித உயிருக்கு கேடுவிளைவிக்கும் நோய்களில் பிரதானமாக டிசீஸ் எக்ஸ் இடம் பெற்றுள்ளது. யாரும் இதுவரை கண்டிராத, எதிர்காலத்தில் மிகப்பெரிய நோயாக டிசீஸ் எக்ஸ் உருவாகலாம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.