முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலையாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம் - ராகுல் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

சிங்கப்பூர் : ராஜீவ் கொலையாளிகளை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

எனது தந்தை மனித வெடிக்குண்டு மூலம் கொன்றதை எண்ணி நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனை அடைந்தோம். பல ஆண்டுகளாக கொலையாளிகள் மீது கோபத்தில் இருந்தோம். -  ராகுல்

5 நாட்கள் பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சிங்கப்பூரில் முன்னாள் ஐ.ஐ.எம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார். அப்போது ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா என்று ஒரு மாணவர் கேட்டார்.

அதற்கு ராகுல் காந்தி, எனது தந்தை மனித வெடிக்குண்டு மூலம் கொன்றதை எண்ணி நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனை அடைந்தோம். பல ஆண்டுகளாக கொலையாளிகள் மீது கோபத்தில் இருந்தோம். ஆனால் தற்போது எப்படியோ கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம். ஒரு விஷயம் தன் வாழ்க்கையில் நடைபெறும் போதுதான் அதை உணரமுடியும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை டி.வி.யில் பார்த்தபோது இரு விஷயங்களை நினைத்தேன்.

ஒன்று இலங்கை ராணுவத்தினர் ஏன் இத்தனை கொடூரமாக நடந்துள்ளனர். மற்றொன்று அவருக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன். வன்முறையை தாண்டி அவர் ஒரு மனிதர், அவருக்கும் குடும்பம் உள்ளது. குழந்தைகள் அவருக்காக அழுவர். நான் இதுபோன்ற வலியை அனுபவித்திருக்கிறேன்.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.



இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து