முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன அழுத்தப் பிரச்னையால் டி.வி நடிகை தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

கொல்கத்தா : கொல்கத்தாவில் 23 வயது இளம் டி.வி. நடிகை, நேற்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை விளைவித்துள்ளது.

மெளமிதா சாஹா என்ற அந்த நடிகை, பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக தெற்கு கொல்கத்தாவின் ரீஜென்ட் பார்க்கிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடெடுத்து தனியாக வசித்து வந்தார். சில டி.வி. சீரியல்களில் நடித்திருந்தாலும், தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இரவு வெகு நேரமாக மெளமிதாவை அவரது பெற்றோர்கள் மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமல் இருக்கவே, அவர்கள் சந்தேகம் அடைந்து உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை முழுவதும் அந்த வீட்டி கதவு திறக்கப் படமால் இருக்கவே அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு கதவை பல முறை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் அவரால் திறக்கவும் முடியவில்லை. சந்தேகம் வலுப்பெற்று அவர் உடனடியாக போலீலில் புகார் அளித்தார்.

அங்கு வந்த போலீசார்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மெளமிதா சாஹா ஃபேனில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். அவரது அறையில் இருந்த தற்கொலைக் கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைக் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து