முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய அதிபர் உடனான சந்திப்பின் ஆபத்தை உணர்ந்தே டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் - அமெரிக்க புலனாய்வு இயக்குனர் தகவல்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பின் ஆபத்தை உணர்ந்தே அவரை சந்திக்க டிரம்ப் ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வு இயக்குனர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வரும் மே மாதம் முதல்முறையாக சந்தித்துப் பேச உள்ளனர். .

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்தது. வடகொரியாவை அழிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், அமெரிக்கா மீது ஏவுகணைகளை வீசுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் பரஸ்பரம் மிரட்டல் விடுத்தனர்.

இந்த நிலையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் முயற்சியால் அந்த நாட்டில் அண்மையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. வடகொரியா - தென் கொரிய உறவில் சுமுகமான நிலை எற்பட்டது.

இதனைத் தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்பிடம் தென்கொரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் டிரம்ப் - கிம் முதல் முறையாக சந்திக்கவுள்ளனர் என்ற தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க புலனாய்வு இயக்குனர் கூறும்போது, "வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான இந்தச் சந்திப்பின் ஆபத்தை டிரம்ப் உணர்ந்து இருக்கிறார். டிரம்ப் இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினையை தீர்க்க இருக்கிறார்" என்றார்.

டிரம்ப் - கிம் இடையேயான இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே முன்பு இருந்த நிலையை விட மோசமாகும் வாய்ப்பிருக்கப்பதாக அரசியல் நிபுணர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து