முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல வி‌ஷயங்களில் பதில் சொல்லாமல் மழுப்புகிறார் - ரஜினிகாந்த் மீது கமல்ஹாசன் தாக்கு

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

பீளமேடு : காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமின்றி பல வி‌ஷயங்களில் ரஜினி பதில் சொல்ல மறுக்கிறார் என்று கோவையில் பேட்டியளித்த கமல்ஹாசன் முதல் முறையாக ரஜினி மீது விமர்சனம் செய்துள்ளார்.

பாராட்டுக்குரியது

ஈரோட்டில் 2 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் கோவை வந்தார். அவர் நேற்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

குரங்கணி காட்டு பகுதியில் 10 பேர் கருகி இறந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. விமானம் மூலம் மீட்பு பணி நடைபெறுவது வரவேற்கத்தக்க வி‌ஷயம். வரும் காலங்களில் வனத்துறையில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்கு அரசு மட்டுமின்றி பொது மக்களுக்கும் பங்கு உள்ளது. மலையேற்ற பயிற்சிக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வனப்பகுதிகளில் விஷேச கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் மீட்பு பணி பாராட்டுக்குரியது. எல்லா நேரங்களிலும் விமர்சனம் செய்யக் கூடாது.

பதில் சொல்ல மறுப்பு...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பட வேண்டும். காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாத பிரச்சனையாக்கி விட்டனர். பவானி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக கேரள முதல்வருடன் பேசுவேன். பல வி‌ஷயங்களில் ரஜினி பதில் சொல்ல மறுக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமின்றி பல வி‌ஷயங்களில் அப்படி தான் உள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து