முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை: தம்பிதுரை

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காவிரி வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.பி.க்கள் 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,

எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் பலன் கிடைக்குமா என்பதை தி.மு.க தெரிவிக்க வேண்டும். காவிரி வாரியத்துக்காக எம்.பி.க்களை ராஜினாமா செய்யக் கூறும் தி.மு.க அதற்காக போராட்டம் நடத்தியதா?. மத்தியில் அங்கம் வகித்த போது தி.மு.க ஏதும் நடடிவக்கை எடுத்ததா?.  - தம்பிதுரை

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். காவிரி வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை. ராஜினாமா செய்வதால் பலன் கிடைக்குமா என்பதை தி.மு.க தெரிவிக்க வேண்டும். காவிரி வாரியத்துக்காக எம்.பி.க்களை ராஜினாமா செய்யக் கூறும் தி.மு.க அதற்காக போராட்டம் நடத்தியதா?. மத்தியில் அங்கம் வகித்த போது தி.மு.க ஏதும் நடடிவக்கை எடுத்ததா?. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். நியாயமான கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து