முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டேரி பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஈரோடு மாவட்டம், குண்டேரி பள்ளம் நீர்த்தே்க்கத்தில் இருந்து கோபி செட்டி பாளையத்தில் பாசனத்திற்கு வரகும் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளுக்கு 15.3.2018 முதல் 20.5.2018 வரை சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து