எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சிராப்பள்ளி, செவனா ஹோட்டல், சுமங்கலி அரங்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, நேற்று(14.03.2018) தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு முகாம்
தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:திருச்சி மாவட்டம், தமிழகத்தின் மையப்பகுதியாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த மாவட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் திகழ்கிறது. சிறுகுறு தொழில் செய்பவர்கள் இந்த விழிப்புணர்வு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் அனுமதியோடு செய்துதரப்படும். ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பு திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில் தொடங்குவதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் முன் உதாரணமாக திகழ்கிறது.
தமிழக அரசு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. விவசாயம் சார்ந்த தொழில்களையும் தொடங்கலாம். விவசாயம் சாராத உற்பத்தி சார்ந்த தொழில்களும் தொடங்கலாம். சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் முறையான அனுமதி பெற்று தொழில் தொடங்கலாம். வருவாய்த்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மணப்பாறையில் 1077 ஏக்கர் அளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மிகவிரைவில் தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருவாய்த்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு திருச்சிராப்பள்ளியில் 10 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சிராப்பள்ளியில் ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. வரக்கூடிய காலங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொழில் மண்டலமாக மாறும். தமிழக அரசு புதியதாக அமைந்திடும் தொழிலகங்களை ஊக்குவித்திடவும், அதன் மூலம் வேலைவாய்ப்பினை பெருக்கிடவும் மான்யத்துடன் கூடிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை பொருத்தவரை வையம்பட்டி, மணப்பாறை, துவரங்குறிச்சி, புள்ளம்பாடி, இலால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, தாப்பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம் போன்ற ஊராட்சி ஒன்றியங்கள் தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டு, இவ்வாட்டாரங்களில் புதிதாக அமைக்கப்படும் தொழிலகங்களுக்கு அதிகபட்சம் ரூபாய் 30 இலட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிலகங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வகையான ஊக்க உதவிகள் மானியங்களை வழங்கி உள்ளன. இவற்றில் முதன்மையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 26 நிறுவனங்களுக்கு ரூபாய் 145.27 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. தவிர மூலதன மானியமாக 42 நிறுவனங்களுக்கு ரூபாய் 290 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார மானியமாக ரூபாய் 14 இலட்சமும், ஜெனரேட்டர் மானியமாக ரூபாய் 5.35 இலட்சமும், வாட்வரி மானியமாக ரூபாய் 7.2 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவைகள் தவிர சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் சுமார் 379 நபர்களுக்கு ரூபாய் 289.03 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. புதியதாக தொழிலகங்களை அமைத்திட விரும்பும் தொழில் முனைவோர்கள் இத்தகைய திட்டங்களின் கீழ் பயன்பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு மட்டுல்லாமல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட முன்வர வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.
தொடர்ந்து தமிழக அரசின் மானியம் மற்றும் இந்தியன் வங்கி கடன் நிதியுதவியுடன், தலா ரூபாய் 2 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 11 நபர்களுக்கு, புதிய ஆட்டோக்களை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, வழங்கினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் மற்றும் மண்டல மேலாளர் கே.ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சு.கந்தசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.வைத்தியநாதன், சிறுகுறு தொழில் சங்கத்தின் தலைவர் என்.கனகசபாபதி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியை ந.மணிமேகலை, மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.