முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 பேரை பலி கொண்ட குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் - 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேனி மாவட்டம் குரங்கிணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து 2 மாதத்தில் விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் வலியுறுத்தல்

கடந்த 11ம் தேதி தேனிமாவட்டம் போடி அருகே குரங்கிணி மலை பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலையேற்றத்திற்காக காட்டுப்பகுதிக்கு சென்றவர்கள் சிக்கித் தவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு காட்டுத்தீ பரவிய இடங்களில் தவிப்பவர்களை மீட்க ஹெலிகாப்டர்களுடன் அதிரடிப்படையை அனுப்பும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

11 பேர் பலி...

இதைத்தொடர்ந்து மலையேற்ற பயிற்சிக்கு சென்று காட்டுப்பகுதியில் தவித்த 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் கவனக்குறைவாக வனத்துறை ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மலையேற்ற பயிற்சிக்கு அனுப்பி நிறுவனம் விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரியாக தமிழக அரசு, வருவாய்த்துறை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாதத்தில்...

குரங்கிணி மலை பகுதியில் ஏற்பட்ட விபத்துக்குரிய காரணங்கள் குறித்தும் வனத்துறை அனுமதி வழங்குவதிலும் தவறு நேர்ந்திருக்கிறதா ? என்பது குறித்தும் மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஏதேனும் விதிமுறை மீறல் நடந்துள்ளனவா ? என்பது குறித்தும் அதுல்யா மிஸ்ரா விசாரணை நடத்துவார் என்று தமிழக அரசின் முதன்மை செயலாளர் நஜிமுதீன் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்தில் வெளியிட வேண்டும் என்றும் இனி இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் வகையில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த ஆணையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து