முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி: சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வரும் பாராளுமன்ற தேர்தலில் மாயாவதியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கான் நிருபர்களுக்க அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கோரக்பூர், பல்பூர் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த போது மாயாவதியும், அகிலேசும் சுமூகமான பேச்சில் ஈடுபட்டனர். அவர்கள் சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது. அதனால்தான் இரு தொகுதிகளிலும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி கிடைத்தது.

இந்த கூட்டணி நீடித்து நிலைக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் சேர்ந்து போட்டியிட வேண்டும். மாயாவதியின் பலத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல் எங்களுக்கு இருக்கும் பலத்தை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். கூட்டணியில் காங்கிரசை சேர்க்க வேண்டும் என்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து