முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தேர்தல் மாற்று அரசியல் பாதைக்கு வழிவகுக்கும்: சோனியா

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் விதம் மாற்று அரசியல் பாதைக்கு வழிவகுக்கும் என்றும் சோனியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பேசியதாவது,

காங்கிரஸ் என்பது ஒரு மாபெரும் இயக்கம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திராகாந்தி சிக்மங்களூர் தொகுதியில் ஏற்படுத்திய மாபெரும் வெற்றி இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அத்தகைய திருப்புமுனை வெற்றி தேவைப்படுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அரசு இருட்டடிப்பு செய்து வருவது வருத்தமளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த அராஜக அரசு காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் செய்து விடவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. கர்நாடக சட்டசபை தேர்தலில் நாம் செயல்படும் விதம் நம்மை மாற்று அரசியல் பாதைக்கு அழைத்து செல்லும். நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து