முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி! ரூ. 5-க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கப்படும்: கட்காரி தகவல்

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் :  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி நாட்டு மக்களுக்கு விரைவில் ரூ.5-க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து 6 நதிகளில் இருந்து தண்ணீர் பாகிஸ்தானுக்கு பாய்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றி எந்த ஊடகமும் எழுதவில்லை. எந்த எம்.எல்.ஏ.வும் இதனை நிறுத்துமாறு கூறவில்லை. --- கட்காரி

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சோதனை முறையில் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போபாலில் நடைபெற்ற நதி மஹோத்சவ் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்காரி, இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் நதி நீருக்காக சண்டையிட்டு கொள்கின்றன. ஆனால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு 6 நதிகள் மூலம் நீர் சென்று கொண்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை.

இந்தியாவில் இருந்து 6 நதிகளில் இருந்து தண்ணீர் பாகிஸ்தானுக்கு பாய்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றி எந்த ஊடகமும் எழுதவில்லை. எந்த எம்.எல்.ஏ.வும் இதனை நிறுத்துமாறு கூறவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து